காமெடி+கருத்துகளுடன் நம்மை எல்லாம் சிந்திக்க வைத்து சிரிக்க வைத்தவர் விவேக் அவர்கள். இவர் ஹீரோவாக நடிக்கும் படம் பாலக்காட்டு மாதவன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இதில் சிவகார்த்திகேயன், அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய விவேக் ‘இந்த படத்தில் நான் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். அந்த பாடலை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் இந்த பாடலின் டிராக்கை அவரிடம் போட்டு காண்பித்தோம். அதை கேட்டதும், உடனே பாடிக் கொடுப்பதாக சம்மதித்தார்.
அவரிடம் பேசிவிட்டு நான் அங்கிருந்து கிளம்பி வெளியே வந்துகொண்டிருந்தேன். அப்போது, சார் என்று ஒரு குரல் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அனிருத் அவருடைய கையில் ஒரு ஜோடி செருப்பை தூக்கிக் கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தார். என்னடா இது, இப்போதுதான் ஓகே சொன்னார், அதற்குள் செருப்பை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறாரே என்று பயந்து போனேன்.
அவர் அருகில் வரும்போதுதான் தெரிந்தது, நான் அவருடைய அலுவலகத்தில் விட்டுச்சென்ற என்னுடைய செருப்பை தூக்கிக் கொண்டு வந்தார் என்பது. அப்போது தான் அவருடைய எளிமை எனக்கு புரிந்தது, இன்றைய இளைஞர்களிடம் நாம் கற்று கொள்ளவேண்டியது நிறைய உள்ளது’ என கலகலப்பாக கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.