சிம்புவின் படம் எப்போதுதான் வெளிவரும் எதிர்பார்த்து ஏங்கி கொண்டிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இதுவரை சரியான பதில் கிடைத்த பாடில்லை.
இருப்பினும் அடிக்கடி சிம்புவை பற்றி ஏதேனும் செய்திகள் கிசுகிசுக்கள் வந்து அவரது ரசிகர்களுக்கு சிறு ஆறுதலை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளி வந்துள்ள தகவல் என்னவென்றால், சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தில் தெலுங்கு நடிகர் ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதுதான்.
ராணா ஏற்கனவே தமிழில் அஜித்துடன் இணைந்து ஆரம்பம் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது சிம்புவிற்காக மீண்டும் கோலிவுட்டிற்கு வரவிருக்கிறாராம். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.