ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மகள்கள் எகடெரினா (28) மற்றும் மரியா (29) ஆகியோர் பொதுமக்கள் பார்வையில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் தற்போது எங்கே உள்ளனர், என்ன செய்கிறார்கள் என்ன படித்துள்ளார்கள் என அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதினின் எதிர்கட்சி தலைவர் அலெக்சீ நவல்னி கடந்த வியாழக்கிழமையன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எகடெரினா பற்றிய ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், நேற்று புதினின் மகளை மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பார்த்தேன். அவர் அறிவியல் கவுன்சிலில் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
புதினின் மகள் 1.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள திட்டக்குழுவுக்கு தலைவியாக உள்ளதாகவும், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதும் அலெக்சி கூறி தான் பொதுவெளியில் தெரிய வந்துள்ளது.
மேலும், எகடெரினா கத்ரீனா விளாடிமிரோவ்னா டிகோனோவா என்ற பெயரில் அவர் பணியாற்றுவதாகவும், டிகோனோவா என்ற பெயரில் பணியாற்றுவது புதினின் மகள் தான் என்று மாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.