சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை அணிக்கும் ஐதராபாத் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
போட்டிக்கு பிறகு நடைபெற்ற பார்ட்டியில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட நடிகை சார்மிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்றார். சார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்தார்.
அவர் திடீரென சார்மி இடுப்பை பிடித்து சில்மிஷம் செய்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்தனர்.
அதிர்ச்சியில் உறைந்த சார்மி, இனி அவரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தந்து, இரண்டு பாதுகாவலர்களை நியமிக்க போவதாக கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.