உலகக்கிண்ணப் போட்டித் தொடர் பெப்ரவரி 14ம் திகதி தொடங்கி, மார்ச் 29ம் திகதி முடிவடைகிறது. இந்த போட்டியில் பி- பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா பாகிஸ்தானுடன் தனது முதல் போட்டியை சந்திக்கவுள்ளது.
இந்தப் போட்டி பெப்ரவரி 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. சுவாரஸ்யமான இந்த நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஷமிதாப் படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த போட்டியை அமிதாபச்சன், கபில்தேவ், ஷோயிப் அக்தர், ஹரிசா போக்லே, ஆகியோர் கிரிக்கெட் வர்ணனை செய்கின்றனர்.
இது குறித்து நடிகர் அமிதாப் கூறுகையில், நமது நாடு கிரிக்கெட் மற்றும் சினிமாவில் உணர்ச்சிவசப்படுவது. தற்போது இது இரண்டும் எனக்கு சேர்ந்து வருவது அற்புதமான நேரம்.
மேலும், இந்த வர்ணனையில் சேர்ந்து கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.