இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது.
கடைசியாக பிரிஸ்பேனில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தின் போது ஷிகார் தவானும், புஜாராவும் களம் இறங்க வேண்டும். ஆனால் பயிற்சியின் போது தவான் காயம் அடைந்ததால் விராட் கோஹ்லி புஜாராவுடன் இணைந்து ஆடினார்.
ஆனால் கோஹ்லியால் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. 1 ஓட்டத்தில் ஜான்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். ஆட்டம் இழந்த கோஹ்லி வீரர்களின் அறைக்கு திரும்பும் போது தவான் மீது கடுமையாக கோபப்பட்டார்.
தான் ஆட்டம் இழந்ததற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி தவானை குற்றம் சாட்டினார். தொடர்ந்து குற்றம் சாட்டியதால் தவானும் பதிலடி கொடுத்தார்.
எனக்கு பொய்யான காயம் இல்லை. நாட்டுக்காக விளையாடுவதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கூறி தவான் வாக்குவாதம் செய்தார். இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியதால் வீரர்கள் அறையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதன் காரணமாகவே வீரர்களின் அறையில் அமைதியின்மை ஏற்பட்டதாக டோனி தோல்விக்கு பிறகு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.