சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரியாணி என்ற தோல்வியை கொடுத்த வெங்கட் பிரபு இயக்கிவரும் படம் ‘மாஸ்'. சூர்யாவுக்கும் தனது முந்தைய படமான அஞ்சான் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
எனவே, வெங்கட்பிரபுவுக்கும், சூர்யாவிற்கும் இது முக்கியமான படம் என்பதால் இருவரின் உழைப்புமே இதில் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மாஸ் படம் வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல்-14 தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ் படத்தில் கருணாஸ், ஸ்ரீமன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்து வருகிறார்.
சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மாஸ் படத்திற்குப் பின்னர் சூர்யா, விக்ரம் குமார் இயக்கத்தில் '24′ என்ற படத்தில் நடிக்க உள்ளார். 24 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் என்பது கூறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.