↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ananya-600x300
அனன்யா என்ன வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதற்கு கணவர் திடீர் கண்டிஷன் போட்டிருக்கிறார். நாடோடிகள், எங்கேயும் எப்போதும், சீடன் படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. ஆஞ்சநேயன் என்பவரை மணந்தார். அதன்பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டதாக கிசுகிசு எழுந்தது. இதுபற்றி அனன்யா கூறியது:
நடிப்பிலிருந்து நான் ஓய்வு பெற்றுவிட்டேன் என்று யார் சொன்னது. என் மனதுக்கு திருப்தி தரும் படங் களை மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். இதனால் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
சமீபத்தில் ரிப்போர்ட்டர் உள்பட 2 மலையாள படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு நான் சந்தோஷமாக இருக்கிறேன். என் கணவர் ஆஞ்சநேயன் எனக்கு ஆதரவாக இருக்கிறார். நடிப்பை பொறுத்தவரை அவர் எனக்கு சுதந்திரம் தந்திருக்கிறார். அதே நேரம் தேர்வு செய்யும் படங்களை கவனமாக தேர்ந்தெடுக்கும்படி கூறி இருக்கிறார். கவர்ச்சி வேடங்களை தவிர்த்துவிடும்படி கூறியுள்ளார்.
வில் வித்தை போட்டியில் எனக்கு ஆர்வம் அதிகம். நீண்ட நாட்களுக்கு பிறகு அதற்கான போட்டியில் பங்கேற்றேன். நிறைய பாயின்ட்களும் எடுத்தேன். தமிழ் படங்களைப் பொறுத்தவரை பல்வேறு கதைகளை கேட்டு வருகிறேன். இன்னும் புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை‘ என்றார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top