தமிழில், ‘குத்து’, ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் திவ்யா. கன்னட நடிகையான இவர், காங்கிரஸ் சார்பில் கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்று எம்.பி.ஆனார்.
பின்னர் நடந்த பொது தேர்தலில் தோல்வி அடைந்தார். இதில் அப்செட் ஆகி இருந்தார் திவ்யா. சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருந்த அவர், அதன் பிறகு ஏதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். சினிமாவிலும் நடிக்கவில்லை. இதையடுத்து அவர் மாயமாகிவிட்டதாக கன்னட திரையுலகில் கூறப்பட்டது.
இதற்கிடையே, ‘தான் எங்கும் ஓடிவிடவில்லை. நியூயார்க்கில் படித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்தார். இப்போது ‘ஏப்ரல் மாதம் இந்தியா திரும்புவேன்’ என்று ட்விட்டர் கூறியுள்ளார் திவ்யா. பிறகு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆவார் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.