↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த ஹோலி தினத்தில் ஆபாச உடையில் போஸ் கொடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகை சோபியா கயாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட சோபியா கயாத், பாலிவுட் திரையுலகிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகின்றார். சன்னிலியோனுக்கு போட்டி போடும் வகையில் கிளாமராக நடித்து வருவதால் இவருக்கு பாலிவுட்டில் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஹோலி தினத்தன்று இவர் கலர்ப்பொடிகளை உடலில் தூவிக்கொண்டு படுகவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். சோபியாவின் படு ஆபாசமாக புகைப்படங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து அமைப்புகள் ஹோலி என்ற ஆன்மீகப்பண்டிகையை அவர் கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை செய்ய அவரை தேடி வருவதாகவும், ஆனால் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top