சல்மான்கானின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தனது விஜயம் தொடர்பில் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார் சல்மான்கான்.
இது தொடர்பில் டுவிட்டரில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், 'தொடர்ந்தும் இலங்கைக்குச் செல்வேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். 'ரெடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற காலப்பகுதியில் நாம் இலங்கையில் மருத்துவ முகாமொன்றை நடத்தினோம்.
'கிக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இலங்கைக்கு சென்று மீண்டுமொரு மருத்துவ முகாமை நடத்துவதற்கு ஜெக்குலின் பெர்ணான்டஸ் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், ஜெக்குலினின் உணவு விடுதிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது. எமது தீர்மானத்துக்கிணங்க, மேற்படி மருத்துவ முகாமை நடத்தினோம்.
ஜெக்குலினின் உணவு விடுதிக்கும் சென்றேன். இந்த விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயமாகும். மீண்டும் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என சல்மான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
'கிக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இலங்கைக்கு சென்று மீண்டுமொரு மருத்துவ முகாமை நடத்துவதற்கு ஜெக்குலின் பெர்ணான்டஸ் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், ஜெக்குலினின் உணவு விடுதிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது. எமது தீர்மானத்துக்கிணங்க, மேற்படி மருத்துவ முகாமை நடத்தினோம்.
ஜெக்குலினின் உணவு விடுதிக்கும் சென்றேன். இந்த விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயமாகும். மீண்டும் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என சல்மான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.