↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிக்கும் நோக்கில் இறந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு விபத்தில் இறந்த வாலிபருக்கு தனியார் மருத்துவமனை ஒன்று சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரமணா பட பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த வாலிபர் அஜீத்குமார். சாலை விபத்தொன்றில் படுகாயம் அடைந்த அஜீத்குமார் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அஜீத்குமார் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அஜீத்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என ஏமாற்றி மருத்துவமனை நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் பணத்தை அவரது பெற்றோரிடம் கட்டச் சொல்லியுள்ளது. அவர்களும் அதன்படி பணம் கட்டியுள்ளனர். பின்னர், திடீரென அஜீத்குமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அங்கு கொண்டு செல்லப்பட்ட அஜீத்குமார் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த அஜீத்குமாரின் உறவினர்கள் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அஜீத்குமார் உயிர் இழந்ததை மறைந்து தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையின் நிறுவனர் மலர்மன்னனை போலீசார் கைது செய்தனர். ரமணா பட பாணியில், தனியார் மருத்துவமனை ஒன்று பணத்தை வாங்கிக் கொண்டு இறந்தவருக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Home
»
news
»
news.india
» ரமணா பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்த தனியார் மருத்துவமனை!
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!
திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் மு[...]
பாலியல் பலாத்கார குற்றவாளியை கற்பழித்த சக சிறைக்கைதிகள்..!
பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக [...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.