கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட மாடல் அழகியான ‘தீபா சன்னதி’, பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வென்றவர். நகைகளை வடிவமைக்கும் கல்வியை படித்துள்ள இவர் கவிதைகள் எழுதுவதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.
‘’தமிழ்த் திரை உலகில் எனக்கென்று தனி இடம் பிடிப்பதே என் லட்சியம். இங்கு கிடைக்கும் அருமையான கதைகள், திறமையான இயக்குனர்கள், திரை உலகினருக்கு கிடைக்கும் மதிப்பு ஆகியவை உலகில் வேறு எங்கும் கிட்டுமா எனத் தெரியாது.
என் முதல் படமான ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளி வரத் தயாராக உள்ளது. இது கன்னடத்தில் ஏற்கனவே நான் நடித்து வெளிவந்த ‘லூசியா’ திரைப்படத்தின் மொழி மாற்று ஆகும். இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு இணையாக நடிக்கிறேன்.
என்னுடைய சக நட்சத்திரங்களான சுவாதி மற்றும் கிருஷ்ணா ஆகியோரை மறக்கவே முடியாது. விஷ்ணுவர்த்தனை போல் ஒரு பெரிய இயக்குனரின் இயக்கத்தில் நடிப்பது பெரும் பாக்கியம். ‘யட்சன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் மூலம் நானும் தமிழில் சிம்ரன், நயன்தாரா பெரிய ரவுண்டு வருவேன்‘ ‘ என்றார்.
0 comments:
Post a Comment