கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விஜய்58 படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஈசிஆரில் அமைப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் தொடங்கப்பட்டது.
பாடல் காட்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட முதல் கட்ட படபிடிப்பை அடுத்து இரண்டாம் கட்ட படபிடிப்பு வாள் சண்டையுடன் ஆரம்பித்திருக்கிறது, இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு ’கருடா’ மற்றும் ’போர்வாள்’ என்ற இரண்டு பெயர்களை சிம்புதேவன் முடிவு செய்து வைத்திருப்பதாகவும், இதில் எதாவது ஒன்றை விஜய் தேர்வு செய்தவுடன் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதோடு விஜய்58 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.