சமந்தாவும், சித்தார்த்தும் இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். 2015ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சமந்தாவின் கூடுதல் கவர்ச்சியால் டென்ஷனான சித்தார்த் சமந்தாவுடனான காதலை முறித்து கொண்டார் என கோலிவுட்டில் செய்திகள் அடிப்பட்டு வருகின்றன. சித்தார்த்துடனான காதல் முறிந்த போதிலும் அவரை பற்றி தவறாக பேட்டி கொடுப்பது என்று அநாகரீகமாக நடந்து கொள்ளாமல் சித்தார்த் நல்ல மனிதர் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார் சமந்தா.
ஆதரவில்லாமல் தெருவில் சுற்றி திரிந்த நாயை சுத்தப்படுத்தி அதற்கு நோரி என்று பெயரிட்டு தன் குழந்தை போல் மிகவும் பாசம் காட்டி வளர்த்து வந்தார் சமந்தா. சித்தார்த்தை பிரிந்தபோது சமந்தா தனது செல்ல நோரியை அவரிடமே விட்டுவிட்டாராம்.
சித்தார்த்தும் மவுக்லி என்ற நாயை வளர்த்து வருகிறார். மவுக்லி மற்றும் நோரி இரண்டு நாய்களையும் தான் அக்கறையுடன் பார்த்து கொள்வதாகவும் பிரிவு பற்றி எதுவும் அறியாமால் ஜாலியாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.