'மௌன குரு' படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் ஹீரோ வேடத்தை ஹீரோயின் வேடமாக அவர் மாற்றுகிறார்.அருள்நிதி, இனியா நடித்த படம் 'மௌன குரு'. சாந்தகுமார் இயக்கினார். இந்; படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. அருள்நிதி ஏற்ற வேடத்தை ஹீரோயின் கேரக்டராக இந்திக்காக அவர் மாற்றுகிறார். அதில் சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளார். இதற்கிடையே 'கத்தி' பட கதைக்கு சொந்தம் கொண்டாடியவர் மீது முருகதாஸ் வழக்கு தொடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‘கத்தி'. இப்படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று உரிமை கேட்டு கோபி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது வழக்கை அவர் திரும்ப பெற்றிருக்கிறார். கோர்ட் நேரத்தை தேவையில்லாமல் வீணடித்ததாக கூறி அவருக்கு கோர்ட் அபராதம் விதித்தது. தற்போது கோபி மீது முருகதாஸ் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார்.இதுபற்றி முருகதாஸ் கூறும்போது, ‘இந்த சர்ச்சை எழுந்த ஆரம்பம் முதலே இந்த வழக்கை விடக்கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தேன். நீதி கிடைக்கும், உண்மை வெளிவரும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனது திறமையை அடுத்த படத்திலும் என்னால் நிரூபிக்க முடியும். எனவே வழக்கு தொடுத்த நபர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அடுத்து நான் இந்தி படம் இயக்குகிறேன்' என்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.