இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் சிம்புதேவன்.
தற்போது இவர் நடிகர் விஜய்யை நாயகனாக வைத்து சரித்திர ஃபேண்டஸி படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, கிச்சா சுதீப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முன்னாள் நடிகை ஸ்ரீதேவியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் அவர் ஹன்சிகாவின் அம்மா வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விஜய்யின் பி.ஆர்.ஓ. பிடி. செலல்வக்குமார் படத்தை தயாரிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பண்ணையூர் அருகே போடப்பட்டுள்ள மாபெரும் செட்டில் துவங்கியது. முதன் முதலில் நடிகர் விஜய் 100 நடனக் கலைஞர்களுடன் பங்கேற்கும் ஒரு பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஹன்சிகா, இப்படம் குறித்து ‘டுவீட்’ செய்திருக்கிறார்.
அதில், ‘‘விஜய் 58 பாடல் படப்பிடிப்பு… செட், காஸ்டியூம், தயாரிப்புச் செலவு என எல்லாமே மலைக்க வைக்கிறது… அருமையான தொடக்கம்!’’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். வீரபாண்டி கோட்டையிலேயே எனத் தொடங்கும் அந்தப் பாடலில் ஹன்சிகா இளவரசி கெட்டப்பில் உடையணிந்து நடித்தாராம். கத்தியின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் என்பதால் இப்படம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.