இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து அந்நாட்டு ஊடகமொன்று இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 12ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவரின் இவ்விஜயத்தின் போது தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பிரதமரின் இவ் நடவடிக்கை தமிழ் நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும் என அவ் ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.
மேலும் அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதினால் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை பெருக்குவதற்கு முயற்சிக்கின்றது எனவும் அவ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.