விஜய், சமந்தா நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாகி பொசிட்டிவ் விமர்சனங்களை தனதாக்கிக்கொண்ட படம் கத்தி. இந்த படம் சமீபத்தில் 50வது நாளை கடந்துள்ளது.
இதை கொண்டாட கத்தி படக்குழுவினர் நெல்லைக்கு செல்கின்றனர். இதற்காக பாளை கோர்ட்டு எதிரே உள்ள பெல் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் விஜய் பங்கேற்பாரா என்ற சந்தேகத்துடன் இருந்த விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த படத்தில் நடித்த சதீஷ் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, கத்தி படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாட விஜய்யும் நானும் நெல்லை சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதோடு விஜய்யுடன் விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய்யை வரவேற்று ரசிகர்கள் பல இடங்களில் வரவேற்பு டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க கொடியும் கட்டப்பட்டு உள்ளன. இதனால் பாளை நகர் பகுதி விழா கோலம் பூண்டு உள்ளது. விழாவில் கத்தி திரைப்பட வினியோகஸ்தர்கள், கத்தி படம் வெளியான தியேட்டர் அதிபர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.