சமீபத்தில் ஆந்திராவை கதி கலங்க வைத்தது ஹூட் ஹூட் புயல். பலரை பலி வாங்கியதுடன், பல வீடுகளை துவம்சம் செய்துவிட்டு சென்றது. தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்திய அளவில் திரும்பிப்பார்க்க வைத்த இந்த சோகம் கோலிவுட்டையும்,
டோலிவுட்டையும் இணைத்தது. டோலிவுட் ஹீரோக்கள் போட்டிபோட்டு நிதியுதவி அறிவித்தனர். அதேபோல் கோலிவுட் ஹீரோக்கள் சூர்யா. கார்த்தி, விஷால் என பல ஹீரோக்கள் நிதி அறிவித்து கைகொடுத்தனர்.
மேலும் விரைவில் நிவாரண நிதி திரட்டும் நட்சத்திர நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.இதுவரை திரையுலகினர் பலர் முயன்றும் முடியாத காரியம் கமலையும் அவரது மகளையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பது. ‘உத்தம வில்லன்‘ படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க ரமேஷ் அரவிந்த் எடுத்த முயற்சியும் வீணாகிப்போனது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.