உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முரளி விஜய்க்கு இடமில்லை. அவரை சேர்க்க மறுத்து விட்டது இந்திய அணித் தேர்வாளர் குழு. ஆனால் அவரோ டெஸ்ட் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவில் வைத்து ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் ரன் குவித்த சாதனை இதுவரை வீரேந்திர ஷேவாக்கிடம் இருந்து வந்தது. அதாவது அவர் 58 என்ற சராசரியுடன், 2003-04 தொடரில் 464 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்து வந்தது. ஆனால் முரளி இதை அடித்து நொறுக்கியுள்ளார். அவர் 60.25 என்ற சராசரியுடன், 482 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.