ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி, கமல் -சிறீதேவி போல் கொடிகட்டிப்பறந்த ஜோடி அஜித் - தேவயானி. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த நான்கு படங்களில் "தொடரும்" ஐ தவிர காதல் கோட்டை , நீ வருவாயென, கல்லூரி வாசல் ஆகிய மூன்று படங்களுமே ஹிட்.. அதிலும் காதல் கோட்டை இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற திரைப்படமாகும்.
திருமணமான பின் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு சென்ற இவர், தனது கணவர் ராஜகுமாரன் இயக்கி நடித்த திருமதி தமிழ் படத்தில் நடித்தார். அவ்வப்போது மலையாளப் படங்களில் அவரை பார்க்க முடிந்தாலும் தமிழைப் பொறுத்தவரை அவர் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தில் தேவயானி நடிக்கிறார். இதில் ரஞ்சித்தும் அவரும் கணவன் மனைவியாக வருகிறார்கள்.
நல்ல வேடம் அமைந்தால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் தேவயானி.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.