↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

திமுக தலைவர் கருணாநிதியின் சமீபத்திய ஸ்டைலாக, அவரது பேஸ்புக்கில் இடம் பெறும் புகைப்பட ஸ்டேட்டஸ்கள் மாறியுள்ளன. சமீபத்தில் ஜெயலலிதாவை குறிப்பிடும் வகையிலான புகைப்பட செய்தியைப் போட்டிருந்தார். இப்போது அவர் இன்னொரு ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இந்த ஸ்டேடட்ஸ் யாருக்கு என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் புதிய அதிமுக அரசு குறித்ததாக இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

ஜெயலலிதா சிறைக்குப் போய் விட்ட நிலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு மந்தமாக இருப்பதாகவும், நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சரிவர வேலை பார்ப்பதில்லை. அரைகுறையாக, அரை மனதுடன், ஜெயலலிதாவை நினைத்தபடி சோகத்துடன் இருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த நிலையில்தான் கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டோ மெசேஜை போட்டுள்ளனர். அதில் உள்ள வாசகம் நம்மை இப்படித்தான் சிந்திக்க வைக்கிறது.


அந்த புகைப்பட மெசேஜில், ஆர்வமும் அக்கறையுமில்லாத எந்தவொரு பணியும் அரை வேக்காட்டுச் சோறாகத்தான் ஆகி விடும் என்று போட்டுள்ளனர். இந்தச் சேதி யாருக்கு என்று உங்களுக்குப் புரிகிறதா...?

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top